பாதி தூக்கத்தில் எழுந்த கணவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனும் மனைவியும் கொடுத்த அதிர்ச்சி

 

பாதி தூக்கத்தில் எழுந்த கணவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனும் மனைவியும் கொடுத்த அதிர்ச்சி

மனைவியை சந்தோசப்படுத்த வேண்டும் என்று பசியும் பட்டினியுமாக வெளிநாட்டில் வேலை செய்து நகை, பணத்துடன் வந்திருக்கிறார் கணவன். அவர் கொண்டு வரும் அந்த பணத்தையும் நகையையும் எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்காரனோடு ஓடிப் போக காத்திருந்திருக்கிறார் மனைவி. கணவனோ இப்போது வேதனையில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

பாதி தூக்கத்தில் எழுந்த கணவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனும் மனைவியும் கொடுத்த அதிர்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் அச்சக்கரையை சேர்ந்தவர் கலைமணி. பெற்றோர் யாரும் இல்லாத நிலையில் வளர்ந்து வந்த கலைமணி, அதே பகுதியை சேர்ந்த நிரோசா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். உள்ளூரில் வேலை பார்த்து வந்ததில் வருமானம் போதவில்லை என்பதால் வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு வருகிறேன் என்று சென்றிருக்கிறார் கலைமணி.

மனைவிக்கு நகை வாங்கி போடவும் மனைவியை சந்தோஷமாக வைத்திருப்பதற்காகத் தான் பசியும் பட்டினியுமாக இருந்து வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்து வந்திருக்கிறார் கலைமணி. ஆனால் நிரோஷா பக்கத்துவீட்டுக்காரனோடு கள்ள உறவு வைத்துக் கொண்டு சந்தோசம் அனுபவித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கலைமணி திடீரென வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்.

பாதி தூக்கத்தில் எழுந்த கணவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனும் மனைவியும் கொடுத்த அதிர்ச்சி

கலைமணி வந்துவிட்டால் இனியும் நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்று ஆலோசனை செய்த நிரோஷாவும் பக்கத்து வீட்டுக்காரனும், எங்காவது சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு பணம் தேவைப்பட்டதால் கலைமணி வெளிநாட்டில் இருந்து வந்ததும் அவர் கொண்டு வரும் பணத்தையும் நகையையும் எடுத்துக்கொண்டு ஓடி விடலாம் என்று திட்டம் தீட்டி இருந்திருக்கிறார்கள். இது தெரியாத அப்பாவி கலைமணி, பெற்றோரும் உறவினர்களும் யாருமில்லாததால் மனைவியையே எல்லாமுமாக நம்பி இருந்திருக்கிறார்.

கலைமணி ஊருக்கு வந்ததும் 3 லட்சம் பணம் 5 பவுன் நகைகளை வீட்டில் மனைவியிடம் கொடுத்துவிட்டு, தூங்கியிருக்கிறார். பாதி தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தபோது பக்கத்தில் படுத்திருந்த மனைவியை காணாது அதிர்ந்து போயிருக்கிறார். இங்கே எங்கே தேடியும் மனைவியை காணவில்லை என்பதால் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் பக்கத்து வீட்டுக்காரனோடு நிரோசாவுக்கு இருக்கும் பழக்கத்தை அக்கம்பக்கத்தினர் சொல்லியிருக்கிறார்கள்.

பாதி தூக்கத்தில் எழுந்த கணவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனும் மனைவியும் கொடுத்த அதிர்ச்சி

இதையடுத்து மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார் கலைமணி. போலீசார் விசாரணையில் பக்கத்து வீட்டுக்காரனோடு நகை பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி இருப்பது தெரியவந்துள்ளது.

எந்த உறவும் இல்லாத இல்லாததால் எல்லா உறவுமாம அவளை நினைத்தேன். அவள் சந்தோசத்துக்காக வே பசியும் பட்டினியுமாக இருந்து சம்பாதித்து வந்தேனே இப்படி மோசம் செய்து விட்டாளே என்று வேதனையில் கிராமத்து மக்களிடையே புலம்பி வருகிறார் கலைமணி.