செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

 

செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

கோவை

கோவையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

கோவை பிள்ளையார்புரம் அருகே போத்தனூர் காவல்நிலைய போலீஸார் இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போது அவர் மதுரையை சேர்ந்த சங்கர்(22) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், பிள்ளையார்புரம் பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துகொண்டு, தப்ப முயன்றபோது பெட்ரோல் இல்லாமல் இருசக்கர வாகனம் நின்றதால் தள்ளிவந்ததும் தெரியவந்தது.

செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

மேலும், சங்கருடன் செல்வபுரம் பகுதியை சேர்ந்த முஷ்ரப் என்ற இளைஞரும் வந்ததாகவும், போலீஸாரை கண்டதும் அவர் தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைதுசெய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.