“பொங்கல் பரிசு மக்களுக்கு கிடைக்க காரணம் பக்தன் செல்லூர் ராஜூ தான்” : தன்னை தானே புகழ்ந்து கொண்ட அமைச்சர்!

 

“பொங்கல் பரிசு மக்களுக்கு கிடைக்க காரணம் பக்தன் செல்லூர் ராஜூ தான்” : தன்னை தானே புகழ்ந்து கொண்ட அமைச்சர்!

திமுக முதல்வர் பழனிசாமியை சாதாரணமாக நினைத்து விட்டது; அவர் புயல் போல செயல்படுகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“பொங்கல் பரிசு மக்களுக்கு கிடைக்க காரணம் பக்தன் செல்லூர் ராஜூ தான்” : தன்னை தானே புகழ்ந்து கொண்ட அமைச்சர்!

மதுரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, எம்ஜிஆர் தமிழகத்திலுள்ள பல்வேறு திட்டங்களுக்கு வித்திட்டவர். பணத்திற்காக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அண்ணாவின் கொள்கைகளை நிலைநாட்டவே அவர் படங்களில் நடித்தார்.
இப்போதெல்லாம் நான்கு படங்கள் ஓடி விட்டால் நான் தான் முதல்வர் என்று போஸ்டர் அடிக்கிறார்கள். முதல்வராக யார் வேண்டுமாலும் ஆகலாம்; ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். திமுகவை தொடங்கியது அண்ணா. ஆனால் அவரின் புகைப்படமும், பெயரும் திமுகவில் இல்லை. கருணாநிதி குடும்பம் மட்டுமே திமுகவில் உள்ளது.

“பொங்கல் பரிசு மக்களுக்கு கிடைக்க காரணம் பக்தன் செல்லூர் ராஜூ தான்” : தன்னை தானே புகழ்ந்து கொண்ட அமைச்சர்!

பொங்கல் பரிசு எல்லோருக்கும் கிடைத்ததற்கு காரணம் எம்ஜிஆரின் தொண்டன், பக்தன் இந்த செல்லூர் ராஜு தான். மதுரை சிறப்பாக இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்து கொண்டிருப்பவன் நான். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளேன். சொல்வதை செய்வேன். செய்வதை சொல்வேன்; செய்ய முடியாததை முடியாது என்று ஓபனாக சொல்லிவிடுவேன். 24 மணிநேரத்தில் மதுரைக்கு தண்ணீர் கிடைக்கும் திட்டம் கொண்டு வந்தவன் நான். நாங்கள் மதுரைக்காரர்கள்; நம்பினால் உயிரை கொடுப்போம்; நம்பாவிட்டால் அதை நான் சொல்லவிரும்பவில்லை ” என்றார்.

“பொங்கல் பரிசு மக்களுக்கு கிடைக்க காரணம் பக்தன் செல்லூர் ராஜூ தான்” : தன்னை தானே புகழ்ந்து கொண்ட அமைச்சர்!


தொடர்ந்து பேசியுள்ள அவர், எங்கள் ஆட்சியின் சாதனைகளை நாங்கள் பட்டியலிட்டு சொல்ல முடியும். திமுகவுக்கு அந்த தைரியம் இருக்கிறதா? திமுக தற்போது பெட்டி பாம்பாக அடங்கியுள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்து விடுவார்கள். திமுக முதல்வர் பழனிசாமியை சாதாரணமாக நினைத்து விட்டது; அவர் புயல் போல செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.