நேற்றிரவு முதலே ஆரம்பித்த மழை : பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு!

 

நேற்றிரவு முதலே  ஆரம்பித்த மழை :  பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

நேற்றிரவு முதலே  ஆரம்பித்த மழை :  பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு!

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக பிப்ரவரி 22ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதலே மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழை போல் பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான வானிலை நிலவியது.

நேற்றிரவு முதலே  ஆரம்பித்த மழை :  பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. விழுப்புரத்தில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மிதமான மழை பெய்தது.