“பலான காட்சியை படமாக்கி,ஊடகத்தில் உலாவ விட்டார்” சல்லாப வீடியோவால் சஸ்பெண்ட் ஆன பேராசிரியர்..
அசாமில் உள்ள திப்ருகார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கணித பேராசிரியர் துருபாஜித் சவுத்ரி .இவர் ஒரு ஆபாச வலைத்தளத்தில் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கும் ஆபாச வீடியோவினை வெளியிட்ட புகாரில் அந்த கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .
திப்ருகார் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியிலிருக்கும் சௌத்திரி மூன்றாண்டுகளுக்கு முன்பு கவுகாத்தியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார் .பிறகு அதை வீடியோவாக அவரே படம் பிடித்துள்ளார் .பிறகு அந்த காட்சியினை ஒரு வயது வந்தோர் இணையதளத்தில் அவரே வெளியிட்டுள்ளார் .அந்த ஆபாச காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது .அதை அந்த கல்லூரியில் பலர் பார்த்துள்ளனர் .அதனால் பலர் கல்லூரி நிர்வாகத்திடம் அவரை பற்றி புகாரளித்துள்ளனர் .
இதனால் கல்லூரி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு பண்ணி ஜூலை 3ம் தேதி போலீசில் புகாரளித்தது .போலீசில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைபடி அவரை அவர்கள் பதவி நீக்கம் செய்ய முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் .
போலீஸ் விசாரணையில் அந்த பேராசிரியர் அந்த வீடியோவில் இருப்பது நான்தான் என்றும் ,கவுகாத்தி ஹோட்டலில் எடுத்த ஆபாச வீடியோவை ஊடகத்தில் பதிவேற்றியது உண்மைதான் என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் .இதனால் போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர் .