உதயநிதியை எச்சரிக்கும் அதிமுக அமைச்சர் :காரணம் இதுதானாம்!

 

உதயநிதியை எச்சரிக்கும் அதிமுக அமைச்சர் :காரணம்  இதுதானாம்!

உதயநிதி நடத்திய ஊர்வலத்தில் தனிமனித இடைவெளி உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உதயநிதியை எச்சரிக்கும் அதிமுக அமைச்சர் :காரணம்  இதுதானாம்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவினர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரையை தொடங்கினார். இதனால் நேற்று காலையில் திருச்சியில் திமுக பிரமுகர் இல்ல விழாவிலும் கலந்து கொள்ள சென்றவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் திருக்குவளையில் பிரச்சாரத்திற்கு சென்றார். அங்கு மேடையில் பேசி விட்டு வந்தவரை போலீசார் அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக கைது செய்தனர். இதை தொடர்ந்து திமுகவினர் உதயநிதியின் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.

உதயநிதியை எச்சரிக்கும் அதிமுக அமைச்சர் :காரணம்  இதுதானாம்!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “உதயநிதி நடத்திய ஊர்வலத்தில் தனிமனித இடைவெளி உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படவில்லை. உதயநிதி போன்றவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.