நண்பரின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயற்சி – கூலி தொழிலாளி கைது

 

நண்பரின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயற்சி – கூலி தொழிலாளி கைது

ஈரோடு

ஈரோட்டில் மதுபோதையில் நண்பரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செந்தில்குமார்(42). இவர் நேற்று மாலை கருங்கல்பாளையம் டாஸ்மாக் கடை அருகே நின்றபோது, அதேபகுதியை சேர்ந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் செந்திலின் தலைமையில் கல்லைப் போட்டு போட்டுவிட்டு தப்பியோடினார். இதில் தலைமையில் பலத்த காயமடைந்த செந்திலை, அங்கு இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நண்பரின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயற்சி – கூலி தொழிலாளி கைது

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செந்திலை தாக்கிய நபர், கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த சந்திரன் (42) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை கைதுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் டாஸ்மாக்கில் மது அருந்தியபோது, தங்களுக்குள் யார் பெரிய ஆள் என்று தகராறு ஏற்பட்டதாகவும், தன்னிடம் மதுவாங்கி குடித்துவிட்டு, தன்னையே கேவலமாக பேசியதால் ஆத்திரமடைந்த கல்லை போட்டை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.