“இன்று முதல் ஏப்ரல் வரை 2ஜிபி டேட்டா இலவசம்” – கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

 

“இன்று முதல் ஏப்ரல் வரை 2ஜிபி டேட்டா இலவசம்” – கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா தரும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

“இன்று முதல் ஏப்ரல் வரை 2ஜிபி டேட்டா இலவசம்” – கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

கொரோனா காரணமாக கல்விநிறுவனங்கள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். அந்த வகையில் ஜனவரி முதல் ஏப்ரல் 2021 வரை 4 மாதங்களுக்கு எல்காட் நிறுவனம் மூலமாக இணையவழியில் கல்விகற்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படவுள்ளது.

“இன்று முதல் ஏப்ரல் வரை 2ஜிபி டேட்டா இலவசம்” – கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா தரும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இணைய வழி வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஏப்ரல் மாதம் வரை 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.