சோதனையின்போது கடத்தல் தங்கத்தை விழுங்கிய பயணி… திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

 

சோதனையின்போது கடத்தல் தங்கத்தை விழுங்கிய பயணி… திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் சோதனையின்போது கடத்தல் தங்கத்தை விழுங்கிய பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.

துபாயில் இருந்து நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த அசாரூதீன்(22) என்ற பயணி தங்கத்தை, உடமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையின்போது கடத்தல் தங்கத்தை விழுங்கிய பயணி… திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

இதனை அடுத்து அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் முயன்றனர். அப்போது, அசாரூதீன் திடீரென தங்கத்தை தனது வாயில்போட்டு முழுங்கினார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, உடனடியாக அசாரூதீனை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு அசாரூதீனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், தங்கத்தை வெளியே எடுக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பயணி தங்கத்தை முழுங்கிய சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.