கணவரை பிரிந்த மகளுடன் கள்ளத்தொடர்பு… வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற பெண்ணின் பெற்றோர்!

 

கணவரை பிரிந்த மகளுடன் கள்ளத்தொடர்பு… வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற பெண்ணின் பெற்றோர்!

திருவள்ளூர்

திருவள்ளூவர் அருகே திருணமான பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த வழக்கறிஞரை, பெண்ணின் உறனவினர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த வெள்ளரி தாங்கலை சேர்ந்தவர் வெங்கடேசன் (37). வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். காக்களூர் ஆஞ்சநேயபுரத்தை சேர்ந்தவர் சத்யா (30). திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து 3 குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வெங்கடேசனுக்கு சத்தியாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை அறிந்த சத்யாவின் பெற்றோர் அவரை கண்டித்து உள்ளனர். ஆனால் சத்யா உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

இதனை அடுத்து, நேற்றிரவு சத்யாவின் பெற்றோர் சங்கர் – செல்லம்மாள் மற்றும் உறவினர்கள் சமரசம் பேசுவதற்காக சத்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது, வெங்கடேசனுக்கும், சத்யாவின் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதில் ஆத்திரமடைந்த சத்யாவின் உறவினர்கள், வெங்கடேசனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சத்யாவையும் அவர்கள் வெட்டினர்.

கணவரை பிரிந்த மகளுடன் கள்ளத்தொடர்பு… வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற பெண்ணின் பெற்றோர்!

இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். இதனை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவள்ளூர் தாலுகா போலீசார், சத்யாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வெங்கடேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சத்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.