இன்னொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா சோதனை

 

இன்னொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா சோதனை

சென்னை: ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பை காட்டிலும் பலவிதமான தளர்வுகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா சோதனை

அதேபோல ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.