கணவர் இறந்த, வேதனையில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…

 

கணவர் இறந்த, வேதனையில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…

தூத்துக்குடி

விளாத்திக்குளம் அருகே கணவர் இறந்த வேதனையில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அடுத்த பேரிலோவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ்(85). இவரது மனைவி மங்கம்மாள்(82). தங்கராஜ், தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்வை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிலத்தில் கடலை மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டிருந்துள்ளார்.

அப்போது, மழையின்மை காரணமாக பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடன் பெற்று நிலத்தில் நெல் பரியிரிட்டு இருந்துள்ளார். பயிர் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் அவரது நிலத்தில் இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

கணவர் இறந்த, வேதனையில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி தங்கராஜ், கடனை திருப்பி செலுத்த முடியாத வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த வேதனையில் இருந்த தங்கம்மாள் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதனை அடுத்து, தம்பதியினர் இருவரது உடல்களுக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, தகனம் செய்யப்பட்டது. கணவர் உயிரிழந்த சோகத்தில் சில மணி நேரத்திலேயே மனைவியும் உயிரிழந்த சம்வம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.