உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட முதியவர் பரிதாப பலி!

 

உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட முதியவர் பரிதாப பலி!

சேலத்தில் உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட முதியவர் பரிதாப பலி!

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் 78 வயதான பாலசுப்ரமணியகுமாரை அவரது தம்பி சரவணன்(70) கை கால்களை கட்டி குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்திருந்தார். இதனால் முதியவர் பாலசுப்ரமணியகுமார் உயிருடன் துடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது சவப்பெட்டியை கொண்டு செல்ல வந்தவர்கள் முதியவர் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து முதியவர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட முதியவர் பரிதாப பலி!

இந்நிலையில் முதியவர் பாலசுப்ரமணியகுமார் சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் இன்று பரிதாபமாக இறந்தார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பாலசுப்ரமணியகுமாரின் தம்பி சரவணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது திட்டமிட்டப்பட்ட கொலையா? அல்லது உயிருடன் இருந்தபோதே பாலசுப்ரமணிய குமாருக்கு இறப்பு சான்றிதழ் தரப்பட்டதா? என சுகாதாரத் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.