சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை தந்த முதியவர் ; போக்ஸோவில் ஏற்கனவே சிறைக்கு சென்றது அம்பலம்!

 

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை தந்த முதியவர் ; போக்ஸோவில் ஏற்கனவே சிறைக்கு சென்றது அம்பலம்!

சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை தந்த முதியவர் ; போக்ஸோவில் ஏற்கனவே சிறைக்கு சென்றது அம்பலம்!

சென்னை அமைந்தகரையில் சாலையில் நடந்து கொண்டிருந்த சிறுமியை ஆட்டோவில் வந்த முரளிதரன் என்ற 56 வயதான முதியவர் கடத்தி சென்றுள்ளார். சிறுமியை கடத்திச் சென்ற முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் முரளிதரனை கைது செய்தனர். போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை தந்த முதியவர் ; போக்ஸோவில் ஏற்கனவே சிறைக்கு சென்றது அம்பலம்!

கடந்த 19 ஆம் ஆண்டில் முரளிதரன் மாதவரம் பகுதியில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது தற்போது தெரியவந்துள்ளது