செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது!
Jul 8, 2020, 10:22 IST1594183926000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர்த்து செங்கல்பட்டு, மதுரை, தேனி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிப்பு 7,085 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.