திருச்சி- நான் பாஜகவில் சேருவதாக வந்த தகவல் தவறானது – கருணாஸ் விளக்கம்

 

திருச்சி- நான் பாஜகவில் சேருவதாக வந்த தகவல் தவறானது – கருணாஸ் விளக்கம்

திருச்சி

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் தவறானது என்று அந்த அமைப்பின் தலைவர் எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார. திருச்சி தாரநல்லூர் பகுதியில் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்ட முத்துராமலிங்க தேவரின் பேனரை

திருச்சி- நான் பாஜகவில் சேருவதாக வந்த தகவல் தவறானது – கருணாஸ் விளக்கம்

பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த ஒரு சூழ்நிலையிலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படாது என்றும், எந்த ஒரு அரசியல் அமைப்புடன் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும் கூறினார். மேலும், முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக போராட இந்த அமைப்பு உறுதுணையாக இருக்கும் என்று கூறிய அவர், அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட்டு கருத்து சொல்வது இயலாது என்று கூறினார். முக்குலத்தோர் அமைப்பைச் சார்ந்தவர் என்ற அடிப்படையில் சசிகலாவிற்கு என்றென்றும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.