சமஸ்கிருதம் எதிர்கால வாழ்வியலை கற்றுத்தருமா? எம்பி கனிமொழி கேள்வி!
2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. இதற்கு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஆழ்ந்து பரிசீலித்து, தெளிவான, துணிவான முடிவு எடுக்கத் தவறக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
'புதிய கல்விக் கொள்கை காணொலி கருத்து மேடை'
இன்று காலை பத்து முப்பது மணி அளவில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேரலையாக..#NEP2020 pic.twitter.com/Dw9zH5w0hU
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 2, 2020
இந்நிலையில் ‘புதிய கல்விக் கொள்கை காணொலி கருத்து மேடை’ நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி எம்பி, முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி, “மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்கும் விதமாக புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது .அடுத்த தலைமுறையை தயார் செய்யும் விதமாக கல்விக் கொள்கை அமைய வேண்டும். சமஸ்கிருதம் எதிர்கால வாழ்வியலை கற்றுத்தருமா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் ” என்றார்.