பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

 

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர் போத்தனூர் போலீசில் சரணடைந்தார். சரணடைந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணா மீது குனியமுத்தூர் போலிசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

அதில் கருப்பர் கூட்டம் வீடியோவால் முருக பக்தராகிய தான் மனதளவில் புண்பட்டதால் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதாக காவல்துறையினரிடம் சரணடைந்த அருண் கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.
பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

இந்நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதாக கைது செய்யப்பட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. கைதான பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.