அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று சொன்ன மகனை காதலன் மூலம் கழுத்தை அறுத்து வீசிய கொடூர தாய்

 

அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று சொன்ன மகனை காதலன் மூலம் கழுத்தை அறுத்து வீசிய கொடூர தாய்

தனது தாய் வேறு ஒரு ஆணுடன் நெருங்கி பழகுவதை பார்த்துவிட்ட மகன் இதை தந்தையிடம் சொல்லப் போவதாக கூறியதையடுத்து பயந்து போன தாய் காதலனிடம் சொல்லி மகனை கொலை செய்யச் சொல்லியிருக்கிறார். காதலனுடம் சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்து குளத்தில் வீசிவிட்டு சென்றிருக்கிறார். இந்த கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று சொன்ன மகனை காதலன் மூலம் கழுத்தை அறுத்து வீசிய கொடூர தாய்

நத்தம் கிராமத்தில் வசித்துவந்த துர்காவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கோபாலுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மகன் தாத்தா கோவிந்தசாமியின் வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறார். கணவர் வேலை நிமித்தமாக வெளியூரில் இருக்கும் நிலையில் கோபாலுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ள உறவாகமாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இதை துர்காவின் மகன் பார்த்துவிட்டதால் அதிர்ச்சியாகி இருக்கிறார். அதற்கு மேலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறான் சிறுவன். இதை நான் அப்பாவிடம் சொல்லாமல் விடமாட்டேன். அப்பாவிடம் சொல்லப் போகிறான் என்று சொல்லியிருக்கிறான். இதை கேட்டு அதிர்ந்து போன துர்கா, எப்படியும் தன் மகன் கணவனிடம் சொல்லிவிடுவான். அதனால் அவனையும் கொலை செய்துவிட வேண்டும் என்று காதலன் கோபாலிடம் சொல்ல கோபால் சிறுவனை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று சொன்ன மகனை காதலன் மூலம் கழுத்தை அறுத்து வீசிய கொடூர தாய்

அதன்படி தாத்தா வீட்டில் இருந்த சிறுவனை, அண்ணாமலை என்கிற இன்னொரு சிறுவனை விட்டு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். அண்ணாமலை சிறுவனை அழைத்து வந்து கோபாலிடம் விட்டுச் சென்ற பின்னர் சிறுவனின் கழுத்தை அறுத்துவிட்டு கோயில் குளத்தில் வீசி விட்டுச் சென்றிருக்கிறார்.

கடந்த 11ஆம் தேதி அழுகிய நிலையில் கோயில் குளத்தில் சிறுவனின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது போலீசாருக்கு. சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று சொன்ன மகனை காதலன் மூலம் கழுத்தை அறுத்து வீசிய கொடூர தாய்

பின்னர் நடந்த விசாரணையில் கோவிந்தசாமியின் பேரனை அண்ணாமலை என்ற சிறுவன் அழைத்துச் சென்றதும் பின்னர் சிறுவன் அண்ணாமலை வீடு திரும்பிய சிறுவன் அவனுடன் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்பதையும் சொல்லி போலீசில் புகார் அளித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இறந்து மிதந்தது காணாமல் போன சிறுவன்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பெற்ற தாயே காதலன் மூலம் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பதியினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. இதையடுத்து துர்காவும் , கோபாலும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.