மனநலம் குன்றிய குழந்தை தலையை சுவற்றில் அடித்து கொன்ற தாய் – ஓராண்டுக்கு பின் கைது!

 

மனநலம் குன்றிய குழந்தை தலையை சுவற்றில் அடித்து கொன்ற தாய்  – ஓராண்டுக்கு பின் கைது!

3 வயது குழந்தை இறந்த வழக்கில் ஓராண்டுக்கு பிறகு தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டை இளைய தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். சக்திவேல் – நதியா தம்பதியின் மூன்று வயது ஆண் குழந்தை இஷாந்த் மனவளர்ச்சி குன்றியதாக இருந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரணமடைந்தது.

மனநலம் குன்றிய குழந்தை தலையை சுவற்றில் அடித்து கொன்ற தாய்  – ஓராண்டுக்கு பின் கைது!

குழந்தையின் கண் சிவந்து வெளியே வந்ததால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. இது குறித்து குழந்தையின் தாய் நதியா குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்ததாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து சில நாட்களில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை மண்டை ஓடு உடைந்து இறந்துள்ளதாகவும், மனவளர்ச்சி குன்றிய குழந்தை தானாக சென்று தரையில் விழ வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் தங்கள் தரப்பில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

மனநலம் குன்றிய குழந்தை தலையை சுவற்றில் அடித்து கொன்ற தாய்  – ஓராண்டுக்கு பின் கைது!

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குழந்தையின் தாய் நதியா தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கரு கலைந்த நிலையில், இரண்டாவது பிறந்த குழந்தையும் மனவளர்ச்சி குன்றியதாக இருந்தால் மன உளைச்சலில் இருந்த நதியா தனது குழந்தையின் தலையை சுவரில் இடித்து உள்ளார்.

மனநலம் குன்றிய குழந்தை தலையை சுவற்றில் அடித்து கொன்ற தாய்  – ஓராண்டுக்கு பின் கைது!

இதனாலேயே குழந்தை இறந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 3 வயது குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் ஓராண்டுக்குப் பிறகு தாய் நதியா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.