“உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்” : சுதந்திர தின விழாவில் மோடி உரை!

 

“உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்” : சுதந்திர தின விழாவில் மோடி உரை!

74 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய  பிரதமர் மோடி அதன் பின்னர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், “சுகாதார கட்டமைப்பு மேம்படுத்துவது அனைத்திற்கும் அடிப்படையானது. நம்மிடம் முன்பு வென்டிலேட்டர்கள்  இல்லாமல் இருந்தன. தற்போது அவற்றை நாம் தயாரிக்கிறோம். இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். நமது விவசாயத் துறையின் கட்டமைப்பை தரமுயர்த்த வேண்டியுள்ளது.

“உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம்” : சுதந்திர தின விழாவில் மோடி உரை!

வங்கித்துறை முதல் விண்வெளி துறை பல்வேறு புதுமைகளை புகுத்தி உள்ளோம். உலகை வழிநடத்தக் கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும். இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன.ஒரே நாடு; ஒரே வழி; ஒரே ரேஷன் கார்டு என பல வகைகளில் நாம் முன்னேறுகிறோம். உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதை இனி நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம்” என்றார்.