திருச்சியில் 2 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

 

திருச்சியில் 2 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடைபெற இருந்த குழந்தை திருமணங்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சிறுமிகளை மீட்டனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சலை கிராமத்தில், கடந்த 24ஆம் தேதி அன்று 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக, மாவட்ட குழந்தைகள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள அறிவுறுத்தலின் பேரில் துறையூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மணப்பெண்ணுக்கு 17 வயது நடைபெறுவது தெரியவந்ததை அடுத்து, அவரை மீட்டு திருச்சியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கவைத்தனர்.

திருச்சியில் 2 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

இதேபோல், திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் அன்றைய தினம் திருமணம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் முசிறி உட்கோட்ட டிஎஸ்பி பிரம்மானந்தா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அவரையும் திருச்சியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கவைத்தனர்.