மறு உத்தரவு வரும் வரை… கீழமை நீதிமன்றங்கள் இயங்காது!

 

மறு உத்தரவு வரும் வரை… கீழமை நீதிமன்றங்கள் இயங்காது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மக்கள் ஊரடங்கை மதிக்காமல் சுற்றித் திரிந்ததால் ஊரடங்கு மேல் கடுமையாக்கப்பட்டது.

மறு உத்தரவு வரும் வரை… கீழமை நீதிமன்றங்கள் இயங்காது!

அதன் படி, காலை 10 மணி வரையிலேயே அனைத்து சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகின்றன. நீதிமன்றங்களும் வழக்கம் போல இயங்கி வந்தன. இந்த நிலையில், கீழமை நீதிமன்றங்கள் பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் வழக்கங்களுக்கு வர தடை என்றும் தலைமை பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.