“எச்சில் இலைக்கு காத்திருக்கும் நாய் போல…” பிரேமலதாவை சாடும் அபிமானி

 

“எச்சில் இலைக்கு காத்திருக்கும் நாய் போல…” பிரேமலதாவை சாடும் அபிமானி

நோட்டா அளவுகூட, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாத பாஜக தலைவரை அதிமுகவினரை ஓடி சென்று பார்க்கிறார்கள் என்று தேமுதிக அபிமானி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையில பாமகவை விட ஒரு தொகுதி அதிகமாக கேட்கும் தேமுதிகவின் விருப்பத்தை அதிமுக ஏற்க மறுத்துள்ளது. இதனால் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அத்துடன் அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூட்டணிக்காக தேமுதிக ,அதிமுகவுடன் கெஞ்சவில்லை ;அதிமுக தான் எங்களிடம் கெஞ்சுகிறது என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்

“எச்சில் இலைக்கு காத்திருக்கும் நாய் போல…” பிரேமலதாவை சாடும் அபிமானி

இந்நிலையில் தேமுதிக தொண்டர் ஒருவர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அற்பத் தொகைக்காக அரிய பொருளை அடகு வைப்பது போல, நீங்கள் இந்தக் கட்சியை அடகுப்பொருளாக்கிவிட்டீர்கள்! “எங்களை எப்போது அழைக்கப்போகிறீர்கள்? உடனடியாக அழையுங்கள் காலதாமதம் செய்யாதீர்கள்” என நித்தம் நித்தம் நீங்கள் அதிமுகவை வேண்டுவது கண்டு, நாங்களெல்லாம் புழுங்கிச் சாகிறோம். கேப்டன் விஜயகாந்த் ஆரம்பித்த கட்சிக்கு இந்த அவல நிலையா? – என வாய்விட்டு அழமுடியாத நிலையில் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

“எச்சில் இலைக்கு காத்திருக்கும் நாய் போல…” பிரேமலதாவை சாடும் அபிமானி

அத்துடன் அந்த கடிதத்தில், ” கேப்டன் கட்சியை, எச்சில் இலை எப்போது வெளியே வந்து விழும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்துக் கொண்டிருக்கும் பிராணி நிலைக்கு கீழே தள்ளி விட்டு விட்டீர்களே. பாமக. தலைவரை அமைச்சர்கள் இதுவரை ஓடி ஓடி பலமுறை சந்தித்துள்ளனர். நோட்டா அளவுகூட, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாத பாஜக தலைவரை மதுரைக்குத் தேடிச் சென்று பார்க்கிறார்கள்” என்றும் 2011 தேர்தலில் கேப்டனுக்காகக் காத்திருந்து, தேர்தல் உடன்பாடு கொண்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில், விவாதம் ஒன்றில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் – கேப்டனுக்கும் இடையே வாக்குவாதம்முற்ற, ஆளும் கட்சியினர் கேப்டனை நோக்கி சப்தமிட, கேப்டன் ஜெயலலிதா முன்னிலையிலேயே எழுந்து, நாக்கைத் துருத்தி – அவர்களை எச்சரித்ததும், கேப்டன் உட்பட அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றுமளவு காரசார விவாதத்தை நடத்தினார். அவரது கட்சிக்கா இந்த ஈனநிலை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“எச்சில் இலைக்கு காத்திருக்கும் நாய் போல…” பிரேமலதாவை சாடும் அபிமானி

தொடர்ந்து அந்த கடிதத்தில், கேப்டன் நல்ல உடல்நிலையோடு இருந்திருந்தால் அதனை ஏற்றிருப்பாரா? கேப்டன் தலைமையில் தலைநிமிர்ந்து நின்ற கட்சிக்கு, இப்போது ஏற்பட்டுள்ள கேவலநிலை தேவையா? நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நிலையும் கேப்டனுக்கு மட்டுமல்ல; எங்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது என்று தனது பெயரை உண்மையுள்ள, கேப்டனின் அபிமானி என்று குறிப்பிட்டுள்ளார்.