கிஷோர் கே சாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!

 

கிஷோர் கே சாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!

முன்னாள் முதல்வர்கள் அண்ணா ,கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சாமி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.பத்திரிகையாளர்கள், முதலமைச்சர் உட்பட பல அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.திமுக தகவல் தொழில் நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் பம்மல் சங்கர் நகர் போலீசில் அளித்த புகாரில் கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று நள்ளிரவு 1 மணிக்கு கைது செய்தனர்.

கிஷோர் கே சாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!

இந்நிலையில் கைதான கிஷோர் கே சாமியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிபதி உத்தரவின் பேரில் 14 நாட்கள் காவலில் கிஷோர் கே சாமி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.எம்.பி, எம்.எல்.ஏ, தலைவர்கள் , பெண்கள் பற்றி அருவருப்பான பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் கிஷோர் கே சாமி. பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஏற்கனவே அவர் மீது வழக்கு உள்ளது. பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியது குறித்த புகாரையும் விசாரிப்பதாக சென்னை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கிஷோர் கே சாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!

முன் ஜாமீன் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு ஏற்கனவே குட்டு வைத்தும் கிஷோர் கே சாமி திருந்தவில்லை. பெண்கள் குறித்த கிஷோர் கே சாமி பதிவுகள் கேவலமான எண்ணம் கொண்டவை என ஐகோர்ட் ஏற்கனவே கூறியது. பெண்களைப்பற்றி குரூரமான கேவலமான பதவிகளை கிஷோர் கே சாமி விட்டதாக ஐகோர்ட்டு ஏற்கனவே கருத்து தெரிவித்த நிலையில், பெண்கள் குறித்த பதிவுகள் அவரது வக்கிரமான புத்தியை காட்டுவதாகவும் ஐகோர்ட்டு கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.