‘கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளங்குழந்தை’ : அதிர்ச்சி சம்பவம்!

 

‘கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளங்குழந்தை’ : அதிர்ச்சி சம்பவம்!

கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை ஒன்று பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு பிற மாவட்டங்களில் இருந்தும் கூட மக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை என பிரிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவசர பிரிவான சிவப்புப் பிரிவில் இருக்கும் கழிவறையில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை ஒன்று அசைவற்ற நிலையில் கிடந்துள்ளது.

‘கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளங்குழந்தை’ : அதிர்ச்சி சம்பவம்!

கழிவறையை சுத்தம் செய்ய சென்ற போது, அந்த குழந்தையை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த மருத்துவர்கள், குழந்தையை கைப்பற்றி சோதித்து பார்த்ததில் குழந்தை இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளங்குழந்தை’ : அதிர்ச்சி சம்பவம்!

அந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் தான் கழிவறையில் வீசிச் சென்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் போலீசார், அங்கிருக்கும் கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் பிறந்த பெண் குழந்தைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.