ராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும்.. இது வெறும் தீர்மானம் அல்ல.. இளைஞர் காங்கிரஸ்

 

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும்.. இது வெறும் தீர்மானம் அல்ல.. இளைஞர் காங்கிரஸ்

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய இளைஞர் காங்கிரஸின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். இந்திய இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும்.. இது வெறும் தீர்மானம் அல்ல.. இளைஞர் காங்கிரஸ்
ராகுல் காந்தி

ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக நியமிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்டு்ளள இந்த நடவடிக்கை கட்சியை வலுப்படுத்தும் மற்றும் நாடு முழுவதும் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் என்று செயற்குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி காங்கிரஸ் மற்றும் சத்தீஸ்கர் காங்கிரசாரும் இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும்.. இது வெறும் தீர்மானம் அல்ல.. இளைஞர் காங்கிரஸ்
காங்கிரஸ்

இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய தேசிய காங்கிரஜின் அரசியலமைப்பின்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட வேண்டும் என்று தேசிய செயற்குழு, இந்திய இளைஞர் காங்கிரஸ் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியது. இது வெறும் தீர்மானம் அல்ல ஆனால் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் குரல் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.