இந்தியாவில் அதிகரிப்பது புதிய நோயாளிகளும் மட்டுமல்ல… இறப்பவர்களின் எண்ணிக்கையும்தான்

 

இந்தியாவில் அதிகரிப்பது புதிய நோயாளிகளும் மட்டுமல்ல… இறப்பவர்களின் எண்ணிக்கையும்தான்

கொரோனா பாதிப்பு உலகளவில் அதிகம் உள்ளது என்றாலும், இந்தியாவில் அது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறதோ என்ற அச்சமும் வருகிறது. லாக்டெளன் தளர்வுக்குப் பிறகு புதிய நோயாளிகள் அதிகரிப்பது அதிகமாகி வருகிறது.  

செப்டம்பர் 9-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகரிப்பது புதிய நோயாளிகளும் மட்டுமல்ல… இறப்பவர்களின் எண்ணிக்கையும்தான்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 77 லட்சத்து  38 ஆயிரத்து 653 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 98 லட்சத்து 31 ஆயிரத்து 984 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 01 ஆயிரத்து 866 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

இந்தியாவில் அதிகரிப்பது புதிய நோயாளிகளும் மட்டுமல்ல… இறப்பவர்களின் எண்ணிக்கையும்தான்

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 70,04,803 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 65,14,231 பேரும், இந்தியாவில் 43,67,436 பேரும், பிரேசில் நாட்டில்  41,65,124 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

இந்தியாவில் அதிகரிப்பது புதிய நோயாளிகளும் மட்டுமல்ல… இறப்பவர்களின் எண்ணிக்கையும்தான்

அமெரிக்காவில் 28,561பேரும், பிரேசிலில் 17,330பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 89,852பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

அமெரிக்காவில் 498 பேரும், பிரேசிலில் 516 பேரும் இறந்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 1,0107 பேர் இறந்திருக்கின்றனர். உலகளவில் ஆயிரம் பேருக்கும் மேல் இறந்தவர்கள் இந்தியாவில் மட்டுமே என்பத் அதிர்ச்சியாக இருக்கிறது.