சாலையில் காத்திருந்த மணமக்கள் : ஓடி வந்து வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

 

சாலையில் காத்திருந்த மணமக்கள் :  ஓடி வந்து வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் பரப்புரையில் போது, உதயநிதி புதுமண தம்பதியை சந்தித்து வாழ்த்து கூறிய சம்பவம் கரூரில் நடைபெற்றுள்ளது.

சாலையில் காத்திருந்த மணமக்கள் :  ஓடி வந்து வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தரகம்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட அவர், பின்னர் வெள்ளியணை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மண்டபத்தில் அன்பழகன் – துர்காதேவியின் திருமணம் நடைபெற்றுள்ளது.

சாலையில் காத்திருந்த மணமக்கள் :  ஓடி வந்து வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி செல்வதை அறிந்த அவர்கள் சாலைக்கு வந்து அவரை பார்க்க காத்திருந்தனர். இதையடுத்து புதுமண தம்பதியை கண்ட, உதயநிதி ஸ்டாலின் காரிலிருந்து இறங்கி மணமக்களை வாழ்த்தினார். பின்பு அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது அங்கு வந்த சிறுமி, உதயநிதிக்கு பூங்கொத்து ஒன்றை அளித்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.