கடைசி நேரத்தில் காலை வாரிய ஓபிஎஸ்; கடுப்பில் சென்ற மக்கள்!!

 

கடைசி நேரத்தில் காலை வாரிய ஓபிஎஸ்; கடுப்பில் சென்ற மக்கள்!!

துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரத்துக்கு வராத நிலையில் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சம்பவம் சென்னை போரூரில் அரங்கேறியது.

கடைசி நேரத்தில் காலை வாரிய ஓபிஎஸ்; கடுப்பில் சென்ற மக்கள்!!

சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளை ஆதரித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அதிமுகவின் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் கூட்டணி கட்சியான பாமக பூந்தமல்லி வேட்பாளர் ராஜமன்னாரை ஆதரித்து, போரூர் மேம்பாலம், ரவுன்டானா அருகே வாக்கு சேகரிப்பதாக இருந்தது.

கடைசி நேரத்தில் காலை வாரிய ஓபிஎஸ்; கடுப்பில் சென்ற மக்கள்!!

ஆனால் அதற்கு முன்னதாக திருவள்ளூரில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்த ஓபிஎஸ், போரூர் வர இரவு 10 மணியை தாண்டி விடும் என்பதால் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. ஓபிஎஸ் வருகைக்காக காத்திருந்த மக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து அமைச்சர் பென்ஜமின் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஆதரித்து பரப்புரை செய்தார்.