தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

 

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

மிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவினால் 5,041 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2, 44,675 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மேலும் 5,914 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு இன்று  மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதே நேரத்தில், 6,037 பேர் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.