கடலூர்- சினிமா எடுக்க சொந்த வீட்டிலேயே திருடிய சின்னத்திரை நடிகை! போலீசில் சிக்காமல் தலைமறைவு!

 

கடலூர்- சினிமா எடுக்க சொந்த வீட்டிலேயே திருடிய சின்னத்திரை நடிகை! போலீசில் சிக்காமல் தலைமறைவு!

திரைப்படம் தயாரிப்பதற்காக சொந்த வீட்டில் 18 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் திருடிய சின்னத்திரை நடிகையை பிடிக்க காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்- சினிமா எடுக்க சொந்த வீட்டிலேயே திருடிய சின்னத்திரை நடிகை! போலீசில் சிக்காமல் தலைமறைவு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு பகுதியில் தேசிங்கு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 18 பவுன் நகை கொள்ளை போனதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்ந்து ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் குற்றவாளியை தேடிவந்தனர்.

கடலூர்- சினிமா எடுக்க சொந்த வீட்டிலேயே திருடிய சின்னத்திரை நடிகை! போலீசில் சிக்காமல் தலைமறைவு!

அப்போது புகார் அளித்த தேசிங்கு மகன் மணிகண்டன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறையினர் மணிகண்டனிடம் விசாரணை

மேற்கொண்டதில் மணிகண்டன் மனைவி பரமேஸ்வரி என்கிற சுசித்ரா சின்னத்திரை நடிகை என்றும், அவர் படம் தயாரிக்க ஆசைப்பட்டதால்

கடலூர்- சினிமா எடுக்க சொந்த வீட்டிலேயே திருடிய சின்னத்திரை நடிகை! போலீசில் சிக்காமல் தலைமறைவு!

விநாயகர் சதுர்த்தி அன்று மணிகண்டன் மற்றும் பரமேஸ்வரி என்கிற சுசித்ரா நேரில் சந்தித்து திட்டம் தீட்டி, மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்து 18 பவுன் நகையை பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள நகைக்கடையில் விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

கடலூர்- சினிமா எடுக்க சொந்த வீட்டிலேயே திருடிய சின்னத்திரை நடிகை! போலீசில் சிக்காமல் தலைமறைவு!

இதை தொடர்ந்து 18 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி மணிகண்டனை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் . தலைமறைவான உள்ள மணிகண்டன் மனைவி சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற சுசித்ராவை காவல் துறையினர் தேடிவருகின்றனர் .