அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரம்… மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்!

 

அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரம்… மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்!

நாமக்கல்

ராசிபுரத்தில் மனைவி அடிக்கடி செல்போனில் பேசியதால் சந்தேகமடைந்த கணவர், அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ன்ற

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனியை சேந்தவர் செந்தில் (40). இவர் சொந்தமாக ஆம்னிவேன் ஓட்டி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (15), கோபால கிருஷ்ணன் (11) என 2 மகன்கள் உள்ளனர். செந்திலுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால், வடுகத்தில் உள்ள சங்கீதாவின் பெற்றோர் வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்துள்ளார்.

பின்னர், நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதற்காக மனைவி சங்கீதா, மகன் ராமகிருஷ்ணனுடன் ராசிபுரத்திற்கு வந்தார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு நேற்று இரவு மூவரும் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கியுள்ளனர். மனைவி, மகன் தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவில் செந்தில், சங்கீதாவின் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்தார். பின்னர், அவரும் மயங்கி விழுந்தார்.

அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரம்… மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்!

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, சங்கீதா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் ராசிபுரம் டிஎஸ்பி முத்துசாமி சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், செந்திலை ராசிபுரம் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சங்கீதா ஆண் நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும், இதனை கண்டித்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது பேச்சை மீறி சங்கீதா செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததால் செந்தில், ஆத்திரத்தில் தலையில் கல்லைப் போட்டு கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து, செந்திலை கைதுசெய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.