கொரோனா வந்த மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்!

 

கொரோனா வந்த மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய, மாநில தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோல் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வந்த மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்!

இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள மஞ்சிரியாலா மாவட்டம் லட்செட்டிபெட்டா பகுதியை சேர்ந்த பெத்தய்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நரசிம்மா. நரசிம்மாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது உறுதியானது. இதையறிந்த அவரது கணவர் பாதிக்கப்பட்ட தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் உள்ள குளியலறையில் தங்க வைத்துள்ளார்.

கொரோனா வந்த மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்!

அத்துடன் அவருக்கு உணவு அளிக்காமல் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. நரசிம்மா நிலையை கண்ட அப்பகுதியினர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் நரசிம்மன் மீட்டதுடன், அவரது கணவருக்கு உரிய ஆலோசனை வழங்கி மனைவியை வீட்டில் தனியறையில் தங்க ஏற்பாடு செய்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.