பிரிந்து சென்ற மனைவியை மீட்கக் கோரி போலீசில் கணவர் புகார்

 

பிரிந்து சென்ற மனைவியை மீட்கக் கோரி போலீசில் கணவர் புகார்

தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்ற மனைவியை மீட்டுத்தரக் கோரி கணவர் போலீசில் புகார் அளித்தார். பென்னாகரம் வட்டம் கே.குள்ளாத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாமுண்டி(39). இவருக்கு முருகம்மாள்(33) என்ற மனைவியும், யாழினி(12) என்ற மகளும் உள்ளனர். சாமுண்டி ஈரோட்டில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வரும் நிலையில், முருகம்மாள் கிராமத்திலேயே மகளுடன் தங்கியிருந்து, பென்னாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பிரிந்து சென்ற மனைவியை மீட்கக் கோரி போலீசில் கணவர் புகார்

இந்நிலையில் கொரோன ஊரடங்கினால் வேலையிழந்த சாமுண்டி, சமீபத்தில் மனைவியிடம் தொலைபேசியில் பேசியபோது அளவுக்கு அதிகமாக மளிகை பொருட்களை வாங்க வேண்டாம் என கூறி சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், முருகம்மாள் குழந்தையை அழைத்துக் கொண்டு மாயமானதாக கூறப்படுகிறது. 15 நாட்கள் கடந்தும் முருகம்மாளை காணாததால் அவரை மீட்டுத்தரக் கோரி இன்று ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரிந்து சென்ற மனைவியை மீட்கக் கோரி போலீசில் கணவர் புகார்
rep image