பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்!

 

பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது:  ராமதாஸ் வலியுறுத்தல்!

கலைஞர் நினைவு நூலகம் அமைக்க பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது:  ராமதாஸ் வலியுறுத்தல்!

திமுக ஆட்சிக்கு வந்ததுடன் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக மதுரையில் 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த சூழலில் கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது சொந்தப் பணத்தை செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்தவர கர்னல் ஜான் பென்னிகுயிக். அவரது நினைவில்லம் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செய்திக்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ், “மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக, மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் வாழ்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டை இடிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்!

கலைஞர் பெயரில் அறிவை வளர்க்கும் கருவியான நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிப்பது முறையல்ல. பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் வசிப்பிடமாக உள்ள அந்த இல்லத்தை பென்னிகுவிக் நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்!

மதுரை பாண்டி கோயில் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக உள்ளன. அங்கு இப்போது திட்டமிடப்பட்டதை விட இன்னும் பிரம்மாண்டமாக நூலகம் அமைக்கலாம். அதற்காக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.