கள்ள உறவால் மனைவியை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்!

 

கள்ள உறவால் மனைவியை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்!

தேனி மாவட்டம் வீரபாண்டி கோட்டூர் அரசமர தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். 44 வயதாகும் இவர் அரசு பேருந்து போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநராக உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தபோது , மலைச்சாமி என்பவர் ராஜேஷ்கண்ணா தலையில் கல்லை போட்டு, அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். ராஜேஷ் கண்ணாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது தம்பி கதிரவன் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ள உறவால் மனைவியை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஷ்கண்ணாவின் உடலை மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் மலைச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ள உறவால் மனைவியை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்!

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், ராஜேஷ்கண்ணா மனைவி மணிமேகலைக்கும், மலைச்சாமிக்கும் கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை ராஜேஷ்கண்ணா கண்டித்துள்ளார். இதனால் மணிமேகலைக்கும், கணவர் ராஜேஷ் கண்ணாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மலைச்சாமி, ராஜேஷ் கண்ணாவை கொலை செய்ய திட்டமிட்டு அவரை கொடூரமாக கொன்றது தெரியவந்துள்ளது.