மரணமடைந்த தந்தை, மகனுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது! – ப.சிதம்பரம் வரவேற்பு

 

மரணமடைந்த தந்தை, மகனுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது! – ப.சிதம்பரம் வரவேற்பு

நீதிமன்றக் காவலில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த தந்தை, மகனுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது! – ப.சிதம்பரம் வரவேற்புகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது.
1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.

http://


சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.