சொத்து தராததால் பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்

 

சொத்து தராததால் பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்

வேதாரண்யம் அருகே பாட்டியை அடித்துக் கொன்ற பேரன் கைது செய்யப்பட்டார்.

சொத்து தராததால் பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நாககுடையான் கிராமத்தை சேர்ந்த முதியவர் செல்வராஜ். இவர் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி ((வயது 80)). இவர்கள் இருவரும் நாகக்குடையான் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வழி பேரன் ரஞ்சித் ((வயது 23)), இரவு தனது தாத்தா செல்வராஜிடம் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் தாத்தா செல்வராஜை தாக்கி உள்ளார். அப்போது பாட்டி காந்திமதி தடுத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த பாட்டி காந்திமதி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காந்திமதியின் பிணத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியை அடித்துக்கொண்ட பேரனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.