தென்காசியில் பாட்டியால் பேரன், பேத்தியை தாக்கிய கொரோனா வைரஸ்

 

தென்காசியில் பாட்டியால் பேரன், பேத்தியை தாக்கிய கொரோனா வைரஸ்

தென்காசி: பாட்டிக்கு கொரோனா வந்ததால் பேரன் மற்றும் பேத்திக்கும் தொற்றுநோய் தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பை காட்டிலும் பலவிதமான தளர்வுகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தினந்தோறும் குறைந்தது 600 முதல் 800 பேர் வரை கொரோனா தொற்றால் தாக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தென்காசியில் ஒரு மூதாட்டிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த மூதாட்டியின் இரண்டரை வயது பேரன் மற்றும் ஒன்றரை வயது பேத்தி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும்  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.