ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமியை அடித்து கொன்று மேம்பாலத்தில் தொங்கவிட்ட தாத்தா

 

ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமியை அடித்து கொன்று மேம்பாலத்தில் தொங்கவிட்ட தாத்தா

ஜீன்ஸ் அணிந்ததால் 17 வயது சிறுமியை அடித்து கொலை செய்து மேம்பாலத்தில் தொங்கவிட்டனர் உறவினர்கள். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ தியாரியா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமியை அடித்து கொன்று மேம்பாலத்தில் தொங்கவிட்ட தாத்தா

தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் பஸ்வான், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்ததால் தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார், சில நாட்கள் கழித்து அமர்நாத் பஸ்வான் மட்டும் லூதியானாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார். தனது மனைவி மற்றும் மகளை சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

சொந்த கிராமத்திற்கு வந்த சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருக்கிறார். இதற்கு அவரது தாத்தா கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் சிறுமியின் உறவினர் அரவிந்த் அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனாலும் சிறுமி எனக்கு ஜீன்ஸ் பேன்ட் அணிவது தான் பிடிக்கும். ஜீன்ஸ் பேண்ட் தான் அணிவேன் என்று சொல்லி அணிந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரம் கொண்ட உறவினர்கள் சிறுமியை சுவற்றில் பலமாக மோதி இருக்கிறார்கள். பின்னர் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். இதில் சிறுமி உயிரிழந்துவிட்டார். இதன்பின்னர் தாத்தா சிறுமியின் உடலை ஒரு ஆட்டோவில் எடுத்துப் போட்டுக்கொண்டு சென்றிருக்கிறார்.

ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமியை அடித்து கொன்று மேம்பாலத்தில் தொங்கவிட்ட தாத்தா

அருகில் உள்ள மேம்பாலத்திற்கு சென்றதும் ஆட்டோ டிரைவர் உதவியுடன் மேம்பாலத்தில் இருந்து சடலத்தை கீழே வீசி இருக்கிறார். ஆனால் சிறுமியின் உடல் கீழே விழாமல் மேம்பாலத்தில் கால்கள் சிக்கி தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த வழியாக சென்ற மக்கள் ஒரு சிறுமியின் சடலம் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் தாத்தாவையும் அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஜீன்ஸ் பேண்ட் அணிந்தது ஒரு குற்றம் என்று ஒரு சிறுமியை அடித்து கொலை செய்த உறவினர்கள் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.