‘7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

 

‘7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர்  மனசாட்சிப்படி  முடிவெடுக்க வேண்டும்’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மனசாட்சியின் படி 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

‘7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர்  மனசாட்சிப்படி  முடிவெடுக்க வேண்டும்’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இதையடுத்து மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் இந்தக் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஆளுநர், 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை தேவை என தெரிவித்துள்ளார்.

‘7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர்  மனசாட்சிப்படி  முடிவெடுக்க வேண்டும்’ – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இந்நிலையில் மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வழக்கில் கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, “7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. கர்நாடகாவில் இதுபோல அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், பல ஆலோசனைக்குப் பிறகே சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் பல கோணங்களில் ஆலோசித்து முடிவெடுத்த இந்த மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு மேலும் அவகாசம் தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.