பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏ-களுக்கு அரசு மாஸ்க் வழங்க வேண்டும் -துரைமுருகன்

 

பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏ-களுக்கு அரசு மாஸ்க் வழங்க வேண்டும் -துரைமுருகன்

பேரவை தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏகளுக்கு அரசு மாஸ்க் வழங்க வேண்டும் என திமுக துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடரை 3 நாட்கள் மட்டுமே நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏ-களுக்கு அரசு மாஸ்க் வழங்க வேண்டும் -துரைமுருகன்

கூட்டத்தில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏ-களுக்கு அரசு மாஸ்க் வழங்க வேண்டும் -துரைமுருகன்

இந்நிலையில் பேரவை தொடர்களில் கலந்துகொள்ளவுள்ள எம்எல்ஏ, பத்திரிக்கையாளர்களுக்கு அரசு மாஸ்க், கிருமிநாசினி வழங்க வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் சட்ட மன்ற உறுப்பினர்கள், எம்பி என பலரும் உயிரிழந்த நிலையில் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.