ரூ.500 கோடி வரை வெடிமருந்துகள், ஆயுதங்கள் நீங்களே வாங்கி கொள்ளலாம்.. முப்படைகளுக்கு மத்திய அரசு அனுமதி

 

ரூ.500 கோடி வரை வெடிமருந்துகள், ஆயுதங்கள் நீங்களே வாங்கி கொள்ளலாம்.. முப்படைகளுக்கு மத்திய அரசு அனுமதி

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா-சீனா இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பாதுகாப்பு படைகளின் ஆயுத அமைப்பை வரிவுபடுத்தும் முயற்சியாக ரூ.500 கோடி வரை தேவையான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாங்கி கொள்ள முப்படைகளுக்கு மத்திய அரசு அதிரடியாக நிதி அதிகாரம் வழங்கியுள்ளது.

ரூ.500 கோடி வரை வெடிமருந்துகள், ஆயுதங்கள் நீங்களே வாங்கி கொள்ளலாம்.. முப்படைகளுக்கு மத்திய அரசு அனுமதி

மத்திய அரசின் இந்த குறுகிய கால அறவிப்பில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ ஹார்டுவேர்கள் வாங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது எதிர்பாராத செயலுக்கும் முப்படைகள் தங்களது செயல்பாட்டை தயார்நிலை மேம்படுத்துவதற்காக இந்த நிதி அதிகாரம் பாதுகாப்பு படைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரூ.500 கோடி வரை வெடிமருந்துகள், ஆயுதங்கள் நீங்களே வாங்கி கொள்ளலாம்.. முப்படைகளுக்கு மத்திய அரசு அனுமதி

ஏதேனும் குறைபாடுகள் அல்லது தேவைகள் எதுவாக இருந்தாலும் அதனை பூர்த்தி செய்ய விரைவான நடைமுறைகளின்கீழ், தேவையான ஆயுத அமைப்புகளை பெறுவதற்கு, முப்படைகளின் துணை தலைவர்களுக்கு ஒரு திட்டத்துக்கு ரூ.500 கோடி வரை நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். யுரி பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு பின்னர் முப்படைகளுக்கு இதே போன்ற நிதி அதிகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.