காதல் விவகாரத்தில் இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து… பெண்ணின் தந்தை கைது…

 

காதல் விவகாரத்தில் இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து… பெண்ணின் தந்தை கைது…

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை கத்தியால் குத்திய பெண்ணின் தந்தையை கைதுசெய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு அடுத்த பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(21). இவர் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வினோத் குமார் கல்லூரியில் உடன் படித்த பிள்ளையார் நத்தம் பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், வினோத் குமார் என்று காதலியை பார்ப்பதற்காக பிள்ளையார் நத்தம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

காதல் விவகாரத்தில் இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து… பெண்ணின் தந்தை கைது…

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை செல்வராஜ், வினோத்தை கத்தியால் சராமாரியாக குத்திவிட்டு, தப்பிச்சென்றார். இதில் பலத்த காயமடைந்த வினோத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து, வினோத் பெற்றோர் புகாரின் பேரில் சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜை கைதுசெய்தனர். காதல் விவகாரத்தில் இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.