திருமணமாகாமல் குழந்தை பெற்ற சிறுமி : அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த பரிதாபம்; இருவர் கைது!

 

திருமணமாகாமல் குழந்தை பெற்ற சிறுமி : அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த பரிதாபம்;  இருவர் கைது!

திருமணமாகாமல் 17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது பேத்தி தாய் தந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில் அன்பழகன் அவரை எடுத்து வளர்த்து வந்துள்ளார். தற்போது 17 வயதான சிறுமி கரூர் மாவட்டத்தில் நர்சிங் படித்து வருகிறார்.

திருமணமாகாமல் குழந்தை பெற்ற சிறுமி : அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த பரிதாபம்;  இருவர் கைது!

இதனிடையே தாத்தா வீட்டின் அருகேயுள்ள கார்த்திக் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அவரது தாத்தா அன்பழகனுக்கு தெரியவர 8 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமியை போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் ரத்தக்கசிவு நிற்காததால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருமணமாகாமல் குழந்தை பெற்ற சிறுமி : அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்த பரிதாபம்;  இருவர் கைது!

முன்னதாக தாத்தா அன்பழகன் அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திக், மணிகண்டன் என்ற இருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இந்த வழக்கில் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் இறுதிவரை தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கூறவில்லை என்று போடி டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதனால் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.