வலிதாங்க முடியாமல் கதறிய சிறுமி.. தப்பியோடிய இளைஞர் சிறையிலடைப்பு

 

வலிதாங்க முடியாமல் கதறிய சிறுமி.. தப்பியோடிய இளைஞர் சிறையிலடைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கட்டிட வேலையை பார்த்து வரும் கணவன் மனைவி இருவரும் தினமும் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைகளை பாட்டி கவனித்து வந்துள்ளார்.

வலிதாங்க முடியாமல் கதறிய சிறுமி.. தப்பியோடிய இளைஞர் சிறையிலடைப்பு

அப்படித்தான் வழக்கம் போல் குழந்தைகளை பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர் . அதே பகுதியில் இருக்கும் ராமன் என்கிற 22 வயது இளைஞர் விவசாய வேலைகளுக்காக வயலுக்கு போகும்போதெல்லாம் அந்த ஆறு வயது சிறுமியிடம் கொஞ்சி விளையாடி செல்வது வழக்கம். அப்படித்தான் அன்றும் அந்த 6 வயது சிறுமியிடம் கொஞ்சி விளையாடிய போது, அந்த பக்கம் போயிட்டு வரலாம் என்று ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கே சென்றதும் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து இருக்கிறார். வலி தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுததும் பதறிப்போன ராமன் சிறுமியை அழைத்துக் கொண்டு வந்து வீட்டின் அருகே விட்டுவிட்டு, யாரிடமும் இது பற்றி சொல்ல வேண்டாம் என்று எச்சரித்து விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் சிறுமிக்கு உடல் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறது. பாட்டியோ, பேத்தி இப்படியே சோர்வாக இருக்கிறாளே என்று கவலையில் இருந்திருக்கிறார்.

வலிதாங்க முடியாமல் கதறிய சிறுமி.. தப்பியோடிய இளைஞர் சிறையிலடைப்பு

பெற்றோர் வந்ததும் இதுகுறித்து சொல்லவும், என்ன நடந்தது என்று மகளிடம் தாய் கேட்டிருக்கிறார். அப்போது அந்த சிறுமி நடந்ததை சொல்லவும் அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக சிறுமியை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார் . அங்கு சிகிச்சையின்போது மருத்துவர்கள் சொன்ன அறிவுறுத்தலின்படி ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்திய பின்னர் ராமனை கைது செய்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியைப் பாலியல் வன்புணர்ச்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.