“விருப்பமில்லாததால் விபரீத முடிவு” – தந்தைக்கு வீடியோ அனுப்பிவிட்டு, தற்கொலை செய்த புதுமணப்பெண்

 

“விருப்பமில்லாததால் விபரீத முடிவு” – தந்தைக்கு வீடியோ அனுப்பிவிட்டு, தற்கொலை செய்த புதுமணப்பெண்

சென்னை

தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்ததால், தற்கொலை செய்துகொள்வதாக தந்தைக்கு வீடியோ அனுப்பிவிட்டு, இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூ கார்த்திகேயன் ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(25). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி ரக்சனா(21), என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

“விருப்பமில்லாததால் விபரீத முடிவு” – தந்தைக்கு வீடியோ அனுப்பிவிட்டு, தற்கொலை செய்த புதுமணப்பெண்

நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில், ரக்‌சனா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு அவரது மாமியார் வசந்தா வீட்டிற்கு வந்துபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்துள்ளது. கதவை தட்டியும் ரக்சனா திறக்காததால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவைதிறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, ரக்சனா தூக்கிட்டு தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா, திருவேற்காடு போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரக்சனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

“விருப்பமில்லாததால் விபரீத முடிவு” – தந்தைக்கு வீடியோ அனுப்பிவிட்டு, தற்கொலை செய்த புதுமணப்பெண்

அப்போது, தற்கொலைக்கு முன்பு அவரது தந்தையின் செல்போனுக்கு, தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்ததால், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறி வீடியோ பதிவை அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனால், ரக்சனா விருப்பம் இல்லாமல் திருமணம் நடைபெற்றதா? அவர் வேறு யாரையேனும் காதல் செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் ரக்சனா தற்கொலை செய்துகொண்டதால், ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது…