கிணற்றில் சடலமாக கிடந்த இளம்பெண்… கணவரை கைதுசெய்து போலீசார் விசாரணை…

 

கிணற்றில் சடலமாக கிடந்த இளம்பெண்… கணவரை கைதுசெய்து போலீசார் விசாரணை…

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே விவசாய கிணற்றில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக, அவரது கணவரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தருமன். இவருக்கு சங்கீதா(28) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, தருமன் மற்றும் சங்கீதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த தருமன், சங்கீதாவை கடுமையாக தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் சங்கீதா மர்மமான முறையில் சடலமாக கிடந்தார்.

கிணற்றில் சடலமாக கிடந்த இளம்பெண்… கணவரை கைதுசெய்து போலீசார் விசாரணை…

இதுகுறித்த அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் காவலூர் போலீசார் சங்கீதாவின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சங்கீதாவின் தந்தை கிருஷ்ணன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கணவர் தருமனை தேடி வந்தனர். அப்போது, ஆலங்காயம் பகுதியில் மறைந்திருந்த தருமனை கைதுசெய்த போலீசார், சங்கீதா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து கிணற்றில் வீசினாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.