காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

 

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ளது ரெட்டியார்பட்டி கிராமம். இந்த கிராமத்துக்கு செல்லும் நான்கு வழிச்சாலை பகுதி ஆள்நடமாட்டம் இல்லாதது. இதனால் மாலை நேரங்களில் காதல் ஜோடிகள் இங்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு அப்பகுதியில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்வது அதிகரித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் எல்லைமீறியுள்ளனர். இதனை மறைந்திருந்து பார்த்த சிலர், காதல் ஜோடியை மிரட்டியதோடு, இருவரையும் பிடித்து தரையில் உட்கார வைத்தனர்.

நீங்கள் யார். எந்த ஊர் என விசாரித்த கும்பல், வீட்டில் சொல்லிவிடுவதாக துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ள கும்பல், அவர்களிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியது. இதை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டுள்ளதாக மிரட்டி சென்ற கும்பலால் காதல் ஜோடி வெளியில் சொல்லவில்லை.

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

ஆனால் அந்த கும்பல், காதலர்களை மிரட்டிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, களமிறங்கிய காவல்துறையினர், வீடியோவில் காதல் ஜோடி சொன்ன பெயர் முகவரியை அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, இது உண்மை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காதல் ஜோடியிடம் புகாரை வாங்கிய காவல்துறையினர், இந்த கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

“காதலர்கள் இது போன்ற ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் செல்பவர்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று நெல்லை காவல்துறை எச்சரித்துள்ளது.